பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு

நீதிமன்றம் அங்கிருந்த மசூதி ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்படவில்லை எனவும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளதாக ரஷிதி சுட்டிக்காட்டினார்.


அயோத்தி நில உரிமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டிசம்பர் 6ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.


ஜமாத் உலமா இ ஹிந்த சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ள டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். அந்த அமைப்பின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவரும் அயோத்தி வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் பங்குகொண்டிருந்தவர்களில் ஒருவருமான மவுலானா ஆசாத் ரஷிதி பெயரில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சீராய்வு மனுவைத் தயாரிக்கும் பணியை எங்கள் சட்ட வல்லுநர்கள் குழு மேற்கொண்டிருக்கிறது. அந்த வேலை இப்போது இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. நிறைவு செய்ய இன்னும் சில நாட்கள் தேவைப்படுகின்றன.” என ரஷிதி தெரிவித்திருக்கிறார்.

அயோத்தி வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் இடம்பெற்ற பத்து பேரில் ஒருவரான உ.பி. ஜமாத் பொதுச் செயலாளர் எஸ்.எம். சித்திக் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். அவருடைய இடத்தில் ரஷிதியின் பெயர் சேர்க்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் முன்பகுதி பின்பகுதியுடன் முரண்படுவதாக உள்ளது என ரஷிதி தெரிவித்தார். “எங்கள் பணிவான மனு உச்ச நீதிமன்றம் அந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோருவதாகும். நீதிமன்றம் அங்கிருந்த மசூதி ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்படவில்லை எனவும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்திருக்கிறது” என ரஷிதி சுட்டிக்காட்டினார்.

Popular posts
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
ஜனநாயக நாட்டில் உதவி செய்யக்கூடாது என ஆணையிடுவது சர்வாதிகாரத்தனம்: ஸ்டாலின் கண்டனம்
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image