சென்னை மெரினாவில் சுமார் இரண்டடி உயரத்திற்கு நுரையுடன் கடல் அலை உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் களங்கம்.
சென்னை நகரம் மற்றும் புறநகர்களில் இருந்து வரும் கழிவு நீர் அடையாறு வழியாக வங்கக் கடலில் கலப்பதால் மாசு அடைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை காரணமா...
கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து கடல் நீரில் நுரை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக பருவமழையின்போது இதுபோன்று நுரை ஏற்படுகிறது. கடந்தாண்டும் இதேபோன்று நுரை காணப்பட்டது.
வேகமான காற்று
பருவமழையின்போது காற்றின் வேகம் அதிகரிக்கும்போது மாசு கலந்த கடல் நீரில் நுரை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
கழிவு நீர் சுத்தம் செய்யதில்லை..
சென்னையின் புறநகர்களில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர் கடல் நீரில் அப்படியே கலக்கிறது. சுத்திகரிப்பு செய்வதில்லை. இதுவும் நுரை ஏற்படுவதற்கு ஒரு காரணம். இது மீனவ மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.